Friday, August 24, 2012

மண்ணாங்கட்டி-மாற்றான் இசை விமர்சனம்




வணக்கம் நண்பர்களே !
 

ரொம்ப நாள் கழிச்சு ஒரு விமர்சனம் மூலம் சந்திப்பதில் மகிழ்ச்சி
இதில இன்னா குஷ்டம்ன்னா இதுகெல்லாம் விமர்சனம் எழுதணுமா ?
என்னுறது தான்! மாற்றான் படம் தான் காப்பின்னு பாத்தா (இந்த லிங்க சொடுக்கி பாருங்க :http://niroshanjc.blogspot.com/2012/07/stuck-on-you.html.) பாட்டு காப்பியோ காப்பி!


 ஐஞ்சு பாட்டு! 
எந்தப் பாட்ட கேட்டாலும் எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கு.” யோவ் ஹாரிஸ் உனக்கு புதுசா பாட்டு போட வரவே வராதா “ என்னு ரசிகர்கள் கழுவி கழுவி ஊத்தும் ரேஞ்சுக்கு எல்லா பாட்டும்! என் தலை எழுத்து இத எழுதுறது ! உங்க தலை எழுத்து இதை எல்லாம் படிக்கிறது.

01.ரேட்டை கதிரே – நா.முத்துக்குமாரு பாட்ட எழுதி இருக்காரு! இன்டர்டக்சன் சாங்காம்! ”என்றென்றும் புன்னகை” பாட்டுட பீட்ட எடுத்து “கஸலி பிஸலி” பாட்ட கசக்கி பிழிஞ்சு! போட்டிருக்காரு! எதோ சும்மா கேக்கலாம்!
ரேட்டை கதிரே – மொட்டந்தலையில மல்லிகைப்பூ !


02.நானி கோனி ராணி – ஆஹா என்ன ஒரு கற்பனை! கருமாந்திரம் பிடிச்ச்சவன்களா ! நானியும் ராணியும் என்ன கொணிக்குள்ளையா குடும்பம் நடத்துறாங்க! விவேகாவின் வரிகளுக்கு ஆஸ்கார் அவாட் குடுக்கலாம்.”வாராயோ வாராயோ” பாட்ட போட்டு இடையில “போய் சொல்ல இந்த மனசுக்கு” பாடுட “எங்கே எப்போ நான் தொலைந்தேனோ தெரியாதே” மியூசிக்க போட்டு ஒரு மாதிரி பாட்ட முடிச்சிருக்காரு.
நானி கோனி ராணி- வாய மூடிடோ போ நி !


03.தீயே தீயே –அண்ணன் பா.விஜய் பாட்டு எழுதி இருக்காரு! கிளப்ல பாடுற பாட்டு ஒரு வரி கூட விளங்கல. என்ன சொல்லவாறீங்க விஜய் சார் ! மற்றும் ஒரு மொக்க பாட்டு! சகிக்கல! எத்தினி பாட்டோட மியுசிக்க சுட்டுருக்கருன்னு ஹாரிஸ்ஸுக்கு கூட தெரியாது !ரப்ப மட்டும் “ஹசளி புசளி” சுட்டு சாவடிச்சிருக்காறு மனுஷன் !
தீயே தீயே – வயிறு எரியுது !


04.யாரோ யாரோ –“யாரும் என்னிடம் சொல்லாத வார்த்தை” அதாங்க பழனி படப்பாட்டுட பீட்டு ,ஸ்பீட்டு எல்லாத்தையும் குறைச்சு புதுசு மாதிரி போட்ட கண்டு பிடிக்க மாட்டம்னு நினைச்சீங்களா ஹாரிஸ் சார் !தாமரையின் வரிகள் அருமை ! இரண்டு பேரும் வெட்டி பிரிக்கப் பட்ட பிறகு பீல் பண்ணி பாடுற மாதிரி பாட்டு அத கேட்டு நான் பீல் பண்ணினது தான் கூட! போங்கடா நீங்களும் உங்க மொக்க செண்டிமெண்ட் பாட்டுகளும் எப்படா தமிழ் சினிமாவ உலக தரத்துக்கு கொண்டு போக போறீங்க . கொசுறு தகவல் இப்பிடி ஒரு பாட்டு “Stuck On You” படத்திலயும் இருக்கு!
யாரோ யாரோ –சத்தியமா நான் இல்லைங்க!


05. கால் முளைத்த பூவே –கார்க்கியின் வரிகள் ஹாரிஸின் மியூசிக்கில் கிக்கி,சீரழிஞ்சு ,நசிஞ்சு,நார் நாரா போய்ச்சு! என்ன வரிகள் என்ன கருமாந்தரத சொல்லுறாங்க ஒரு எழவும் விளங்கல! மியூசிக் சுட்டார் என்னு சொல்ல மாட்டேன். எனுனா இது எல்லா “பலே” நடனங்களிலும் பயன் படுத்தும் பலே மியூசிக்!
கால் முளைத்த பூவே – காதல ரெத்தம் வருகுது

சொந்தமா படமும் எடுக்க மாட்டீங்க! சொந்தமா பாட்டும் போட மாட்டீங்க !
அப்ப என்ன ம .....க்கு சிங்கப்பூர்ல கொண்டே இசை வெளியீட்டு விழா சேய்யிறீங்க! அங்க போய் எங்க தமிழ் மானத்த விக்கவா!
மொத்தத்தில் மாற்றான் இசை –பீசா ,பெர்கர் இருக்க வேண்டிய இடத்துல தவிடும் பருத்தி கொட்டையும் ,புண்ணாக்கும் வைச்சிருக்காங்க!

 பி.கு: சரி விடுங்க !போகும் போது மறக்காம ஒரு லைக்கை இந்த பேஜுக்கு போட்டுட்டு போங்க.

No comments:

Post a Comment